Sunday, December 6, 2009

பதிவு போட்டுருக்கேன் , பதிவு போட்டுருக்கேன் (யாராவது படிங்களேன் )

வணக்கம் இது என்னோட முதல் பதிவு. யாரு என்ன எழுதுனாலும் சலிக்காம படிச்சுட்டு போற அக்மார்க் தமிழ் நண்பர்கள நம்பி நானும் களத்துள் குதிக்கறேன். வழக்கம் போல தமிழ் நண்பர்கள் ஏகோபித்த ஆதரவு தரணும்னு அன்போட கேட்டுக்கறேன்.
இந்த பதிவுகள் மூலம் என்னை பாதித்த, பிடித்த, படித்த மற்ற விஷயங்களிலும் மூக்கை நுழைத்து பதிவுலகை கலக்க திட்டமிட்டுள்ளேன். இந்த அதிர்ச்சியான செய்தி எந்த சாட்டிலைட் சேனலுக்கும் தெரியாது. நான் பதிவு போட வந்ததுக்கும் 2012 படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை( நம்புங்க பாஸு).
படத்தோட கதையபத்தி பலரும் பயங்கரமா பீதிய கேளப்புனதுல (வேட்டைக்காரன் வேற ரிலீஸ் ஆக போதாம் ) நாளைய பதிவுலக வரலாறுல நம்ம பேரு இல்லாம போய்ட போதுன்னு வரலாற்று மேல உள்ள காதலால் இந்த பதிவ நீங்க படிக்க வேண்டியதா போச்சி.(படிப்பீங்க)
ஆனா பாருங்க பிரதர், ஸ்டார்ட் பண்ண பிறகுதான் எத பத்தி எழுதறதுன்னு குழப்பம் வந்தது. நிகழ் கால உலகம் காமெடி மற்றும் காம நெடி அதிகம் உள்ள விஷயங்களுக்கே முக்கியம் தர்றதா எனக்கு தோன்றியது.
காமெடிய பத்தி எழுதறவிட என் போட்டோவ போட்டா உண்மையிலே காமெடியா இருக்கும். காம நெடிய பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது (இன்னும் பேச்சிலர்தான்.) என்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை .... எல்லாரும் நம்ம எழுதறதை படிச்சு பாராட்டுவாங்கன்னு ராப்பகலாகண்ட கனவு, கலாம் பாய் கனவு மாதிரியே நிறைவேராம போய்டுமோன்னு ஸ்தம்பிச்சு உட்கார்ந்துட்டேன்.
காஞ்சிபுரம் அய்யரோட அட்டகாசம் ஊரெல்லாம் சிடியா சிரிப்பா சிரிக்கிற இந்த நேரத்துல அத பத்தி எழுதறதா இல்ல எப்பவோ நடந்த இடிப்புக்கு இன்னைக்கும் தெருவெல்லாம் பேரணியா போலீசுக்கு டென்சன் கொடுத்துகிட்டு இருக்கற பிரச்சனைய(டிச 6) பத்தி எழுதறதான்ற டைலம்மால கட்டிங் போடலாம்னு கிளம்பிட்டேன். (சரக்கு போட்டாலாவது சரக்கு எதாவது வருதான்னு பார்ப்போம் )
ஓவர்டு, கேட்ட சரக்க என்னைக்குமே தராத அவங்களுக்கு புடிச்ச சரக்க மட்டுமே தர டாஸ்மாக் . (என்னடாது காலேஜ் வாத்தியார் சரக்குலாம் அடிக்கராருன்னு யோசிக்கறீங்களா? இப்பல்லாம் லேடிஸ் காலேஜ் ஹாஸ்டல் போய் பாருங்க குடிச்சு மட்டுமல முடிச்சும் போட்டு வச்சிருக்காங்க )
வழக்கம் போல சூபர்வைசர் அரசாங்க நலத்திட்டங்களுக்காக அனைத்து குடிமகன்களிடமும் எக்ஸ்ட்ராவாக ரெண்டு ரூபாய் கட்டிங் போட்டு கல்லாவை ரொப்பினார். யாரும் பாக்கறதுக்குள்ள வாங்கிட்டு போய்டனும்னு பரபரப்பா நகர்ந்தப்போ டேய் மாப்ளன்னு ஒரு குரல், நம்பள யாரோ அடையாளம் கண்டுட்டாங்களோன்னு குடிக்காமலே வேர்த்து போய் திரும்பினா அட, நம்ப வெங்கி ..!!.
என்ன வெங்கி?என்றேன் .
எங்கே இந்த பக்கம்? ஒன்ண பார்த்து ரொம்ப நாளாவுது கல்யாணம் ஆயிடுச்சா ? என்றான்.
இன்னும் ஒரு தடவ கூட ஆவலே, உன்ன மாதிரி அதிர்ஷ்டம் எனக்கு இல்ல. இப்பவும் மெய்ன்டன் பண்ணிக்கிட்டு இருக்கியா? என்றேன்.
அதெல்லாமில்ல, வீட்ல இல்ல சும்மா ஜாலியா இருக்கலாம்னு வந்தேன் என என்கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தான். டேய் நான் அத கேக்கல ,ஸ்டில் யுஆர் வித் தட் ஆன்டி ஆர் நாட்? நேராக கேட்டேன்.
இந்த முறை மூத்திரம் குடித்த மாடு மாதிரி சிரித்த அவன் " ஆன்ட்டிலாம் ஊரவிட்டு போய் பல வருஷம் ஆச்சு என நமீதா மேல் சத்தியம் செய்தான். இந்தஇடத்தில் ஒன்று சொல்லியே ஆக வேண்டும், நம்ம வெங்கி பிக்-அப் ட்ராப்லகில்லாடி . ஒரு முறை பழசிராஜா படத்துல இப்பவோ அப்பவோ அவுத்துக்கும்போல இருந்த கனிகா கச்சை மாதிரி கைலிய புடிச்சிக்கிட்டு ஓடி வந்தது இன்னும்ஞாபகம் இருக்கு. என்ன விஷயம்னா ஆன்டி வீட்ல இவன் சரசமாடிட்டு இருந்தப்பஆண்டியோட லைசென்ஸ் ஹோல்டர் காலிங்பெல் அமுக்கிட்டாரு. நம்ப வெங்கிஅப்பதான் ஆய கலை
64 புதுசா ஒன்ன சேக்கரதுக்காக எடக்கு மடக்கானபொசிஷன்ல இருந்தான். பதட்டத்துல சுவர் ஏறி வந்ததுல ஆன்டியோட பேண்டிகால் மாறி இவனோட இடுப்புல வந்துடுச்சு.( இன்னைக்குலாம் அத ரெண்டுபக்கமும் தைச்சு யாராவது குடும்ப தலைவர் ரேஷன் கடைக்கு போனா இலவசஅரிசி இருவது கிலோவும் ஈசியா அடங்கிடும் ) அப்பேற்பட்ட அளவெல்லாம்அடக்கியாண்ட கிங்கு நம்பாளு. இதெல்லாம் நெனைச்சி சிரிச்ச நாங்க மெல்லவெளிய வந்தோம். ஆளுக்கு காலும் நாலு ஆப்பாயிலும் உள்ள தள்ளிருந்தோம். நல்லா பேசிகிட்டு வந்த வெங்கி திடீர்னு குட்டி போட போற ஆடு மாதிரிமுழிச்சான் . என்னடா போதை ஏறிபோச்சா என்னன்னு பார்த்தா செல்லுலவீட்டுக்கரம்மாவோட நம்பர்.
எனக்கு புரியாத விஷயம் இதான் கல்யாணத்துக்கு முன்னாடி கட்டுக்கடங்காதகாளையா
இருக்கறவங்கல்லாம் ஏன் இப்படி சீட்லேஸ் டைகரா மாறிபோனாங்க? (இன்னும் சீடோட இருக்கற டைகர் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் ...)
நல்லாருந்துச்சா சார்...!!! (இந்த வரிய கமல் காதலா காதலா படத்துல ஹனிபா-ட்ட ஹேஎன்டிகேப்ட் வேசத்துல கேட்ட மாதிரி படிக்கவும்)
டிஸ்கி : ஒரு சுவராஸ்யத்துகாக டாஸ்மாக் போனேன் நிஜத்துல இல்ல.


12 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பரே எழுத்து சுவராஸ்யம் உள்ளதாக இருக்கிறது எழுத்துபிழைகளை தவிர்க்கவும்
    (வேர்டு வெர்ப்பிகேசனை எடுத்து விடவும்)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. ஆரம்பமே அசத்தல் திரு.தாஸ். எழுத்தில் வசீகரம் உள்ளது. தொடருங்கள்.
    //இன்னைக்குலாம் அத ரெண்டுபக்கமும் தைச்சு யாராவது குடும்ப தலைவர் ரேஷன் கடைக்கு போனா இலவசஅரிசி இருவது கிலோவும் ஈசியா அடங்கிடும்//
    -நல்ல உவமை தலைஉ!!

    'பிரபல பதிவர்கள்' ஆதரவளிப்பார்கள் என்பது சந்தேகமே..இருப்பினும் தொடருங்கள்!!

    ReplyDelete
  4. வந்துட்டான்யா....வந்துட்டான்யா....

    வாங்க Mr.காலிங்
    வாழ்த்துக்கள்.
    மிக அருமையான கற்பனை(நான் நம்பிட்டேன்).
    அது சரி யார் அந்த வெங்கி + ஆண்டி?

    ReplyDelete
  5. fine writing. keeeeeeeeeep it up boss

    ReplyDelete
  6. நல்லா எழுதுங்க நண்பரே.... தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வலையுலக நண்பருக்கு வாழ்த்துகள்

    வருக வருக

    ReplyDelete
  8. congrates boss ! continue.......

    ReplyDelete
  9. // ஒரு சுவராஸ்யத்துகாக டாஸ்மாக் போனேன் நிஜத்துல இல்ல.//
    nambra mathiri illaye?

    ReplyDelete
  10. கமெண்ட் எழுதுன அத்தன நல்ல உள்ளஙலுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாங்க நன்பர்கல்ளே...

    ReplyDelete