Sunday, December 6, 2009

சிம்புகிட்ட நயன் ஜம்பா?


எம் தாய் நாடு(இந்தியா) மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து , யூஎஸ் மற்றும் பல உலக நாடுகளிருந்து எம்முடைய முந்தய பதிவுக்கு வருகை தந்த லட்சோப லட்சம் அன்பர்களுக்கு(வருவாங்கன்னு எதிர்பார்த்தேன் ) என் மனமார்ந்த நன்றிகள். சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கிற ஒன்று என் முதல் பதிவும் அப்படித்தான் . பதிவு போட வேண்டும் என்ற ஆசையில் ப்ளாக் கிரியேட் செய்து ஒரு வருடம் (கிட்டத்தட்ட) ஆகிறது. ஆனால் ஆண்டவன் இன்னைக்குதான் அருள் புரிஞ்சார். பல சக நகைச்சுவை பதிவர்களின் பதிவுகள் மனதுக்கு சுவையாகவும் கண்ணுக்கு அழகான நகையாகவும் மொத்தத்தில் ஒரு விருந்தாகவும் என்னைப்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
ஒக்கே . விஷயத்துக்கு வருவோமா? சன் டிவில சீனா கும்மி சான் கும்மி சாச்சாகும்மின்னு (ஃபெப்சி விழா) நம்ம நடிக நடிகையர் கும்மி அடிச்சிட்டு இருந்தப்போ காது டிவிக்கும் கண் கம்ப்யுடருக்கும் கொடுத்து டைப்பிக்கொண்டிருக்கிறேன். நம்ம ஜவுளி அமைச்சரின் சகோதரர் தமிழ் மக்களின் நெஞ்சங்களை பனியன் பாடிகளை தாண்டியும் பிராண்டுவதென்ற உயரிய நோக்கத்தோடு காட்டிய படம்தான் இந்த நிகழ்ச்சின்னு நெனைக்கிறேன். இதுல டிஆர்பி ரேட்டிங்க கூட்டி காட்ட சிம்பு பாடிய லூசு பெண்ணே பாடலையும் அதற்கு நயன் ரியாக்க்ஷனும் (உபயம் எடிட்டிங் )மாற்றி மாற்றி காட்டி நயன் என்னமோ சிம்புட்ட ஜம்ப் ஆகிற மாதிரியே சீன் போட்டார்கள். புரோட்டா வாங்கி கொடுத்து போனசா சிக்கனும் கொடுத்து புரணி கேக்கற நம்ம மக்கள்தான் பாவம். (அரசு டிவில ஏமாத்த மாட்டாங்கன்னு நெனைக்கறாங்க போல)
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்குதே நெஞ்சம்னு பாடிட்டாங்க அப்பவே. அதனாலே, கடன் அன்பை முறிக்கும், சில சமயம் எலும்பையும் முறிக்கும்( ரௌடிகிட்ட வாங்குனா) எல்லாரும் வாங்குன கடன ஒழுங்கா திருப்பி கொடுத்துடுங்க இல்லன்னா சிக்கல்தான் (அரசியல்ல இருந்தா தள்ளுபடி கிடைக்கும் ).
கடன்னா பணம் மட்டும் இல்லங்க ... இன்னும் சில விஷயம் இருக்குது . திருப்பி காட்டாத அன்பு கூட கடன்தான் ..! நம்ப முதல்ல காலை கடன பத்தின சில சுவராஸ்யமான(?) சம்பவங்கள பாப்போம் .
1995 ம் வருடம்னு நெனைக்கிறேன் .. நாங்க நண்பர்கள் நாலு பேர் ஏற்காடு கார்ல போனோம். எங்களுக்கு சாரதியா வந்தவர் 50 வயசு உள்ள ஒரு நண்பர் & பெரியவர் . டை கட்ன ஹோட்டல் அதிகாரிங்க 4 பேருக்கு 2 ரூம் போட்டு ஆகணும்னு சொன்னதால போட்டோம். காலைல 7 மணி அளவுக்கு எங்க சாரதி, "சார் 2 ரூம்லயும் கக்கூஸ் வேற மாதிரி இருக்கு எனக்கு பழக்கமில்ல , நம்ம கக்கூஸ் எங்க சார் இருக்குன்னு" கேட்டார். "அட, என்ன பெரிசு இதுல இப்படித்தான் வெளிஏத்தனும்னு டெமோ காமிச்சு உள்ள அனுப்பினோம். கொஞ்ச நேரம் கழிச்சு கட முடன்னு ஒரே சத்தம். சாரதி நண்பர் வேட்டிய முண்டாசு கட்டி, பட்டாபட்டிய கைல வச்சிக்கிட்டு சார் உடஞ்சிடுச்சு.... பன்ல கிழிச்சு ரத்தம் வருது சார்னாரு....
என்னமோ ஏதோன்னு நெனைச்சி உள்ள போய் பாத்தா வெஸ்டன் டாய்லட் ஐயப்பன் கோவில் தேங்காயா உடஞ்சி கிடக்கு....???!!!
என்ன ஆச்சின்னு விசாரிச்சா, " சார் எனக்கு உட்கார்ந்து போக வரலே, அதனாலே, வழக்கம் போல மேல ஏறி ட்ரை பண்ணேன் அதான் இப்படி ஆய்டுச்சு " என அப்பாவியா சொன்னார். அப்புறம் அவருக்கு ஃபஸ்ட் எய்ட் பண்ணி, ஹோட்டலுக்கு பணம் கட்டிட்டு வந்தோம்.
இன்னொரு சம்பவம், சென்னைக்கு சில முதல் வருகை நண்பர்களோடு வந்த போது ட்ரிப்லிகேன்ல உள்ள லாட்ஜ்லே தங்குனோம். அதுல ஒரு நண்பர், போட்ட பேன்ட் , ஷர்ட்டோட வந்துட்டார். மறுநாள் போட பேன்ட் , ஷர்ட் வேணும்கற ஆவல்ல, துணி துவைக்க போய்ட்டார். என்ன சார் வாஷ் பண்ணிஆச்சான்னு கேட்டப்போ, " ஊற வச்சிருக்கேன்ன்னு " கூலா சொன்னார். பத்துநிமிஷம் கழிச்சு, இன்னொரு நண்பர் அலறிகிட்டே ஓடி வந்தார். என்னன்னு விசாரிச்சா நம்பாளு பேன்ட், ஷர்ட வெஸ்டர்ன் டாய்லேட்ல உள்ள தண்ணில ஊற வச்சிருக்காரு...!!!!????
இந்த விஷயம்லாம் பார்த்து/கேக்குற போது, நளதமயந்தி படத்துல மிஸ்டர் .மாதவன் ஏரோப்லன்ல டிஸ்ஸு பேப்பர் அனுமார் வால் போல நீட்ட வந்த காட்சி ஞாபகம் வந்தது. சில சினிமாக்களில் உண்மை காட்சிகளும் இடம் பிடிக்கறது என்ற எண்ணமும் உரைத்தது.
காலைகடன்னு சொன்னாலும் கடனேன்னு போறதவிட கரெக்டா போறது நல்லதுன்னு நெனைக்கறேன். நீங்க என்ன சொல்றீங்க?

உங்க கருத்தோட வோட்டையும் போட்டீங்கண்ணா (புள்ள குட்டிங்க நல்லாருக்கும் )







பதிவு போட்டுருக்கேன் , பதிவு போட்டுருக்கேன் (யாராவது படிங்களேன் )

வணக்கம் இது என்னோட முதல் பதிவு. யாரு என்ன எழுதுனாலும் சலிக்காம படிச்சுட்டு போற அக்மார்க் தமிழ் நண்பர்கள நம்பி நானும் களத்துள் குதிக்கறேன். வழக்கம் போல தமிழ் நண்பர்கள் ஏகோபித்த ஆதரவு தரணும்னு அன்போட கேட்டுக்கறேன்.
இந்த பதிவுகள் மூலம் என்னை பாதித்த, பிடித்த, படித்த மற்ற விஷயங்களிலும் மூக்கை நுழைத்து பதிவுலகை கலக்க திட்டமிட்டுள்ளேன். இந்த அதிர்ச்சியான செய்தி எந்த சாட்டிலைட் சேனலுக்கும் தெரியாது. நான் பதிவு போட வந்ததுக்கும் 2012 படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை( நம்புங்க பாஸு).
படத்தோட கதையபத்தி பலரும் பயங்கரமா பீதிய கேளப்புனதுல (வேட்டைக்காரன் வேற ரிலீஸ் ஆக போதாம் ) நாளைய பதிவுலக வரலாறுல நம்ம பேரு இல்லாம போய்ட போதுன்னு வரலாற்று மேல உள்ள காதலால் இந்த பதிவ நீங்க படிக்க வேண்டியதா போச்சி.(படிப்பீங்க)
ஆனா பாருங்க பிரதர், ஸ்டார்ட் பண்ண பிறகுதான் எத பத்தி எழுதறதுன்னு குழப்பம் வந்தது. நிகழ் கால உலகம் காமெடி மற்றும் காம நெடி அதிகம் உள்ள விஷயங்களுக்கே முக்கியம் தர்றதா எனக்கு தோன்றியது.
காமெடிய பத்தி எழுதறவிட என் போட்டோவ போட்டா உண்மையிலே காமெடியா இருக்கும். காம நெடிய பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது (இன்னும் பேச்சிலர்தான்.) என்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை .... எல்லாரும் நம்ம எழுதறதை படிச்சு பாராட்டுவாங்கன்னு ராப்பகலாகண்ட கனவு, கலாம் பாய் கனவு மாதிரியே நிறைவேராம போய்டுமோன்னு ஸ்தம்பிச்சு உட்கார்ந்துட்டேன்.
காஞ்சிபுரம் அய்யரோட அட்டகாசம் ஊரெல்லாம் சிடியா சிரிப்பா சிரிக்கிற இந்த நேரத்துல அத பத்தி எழுதறதா இல்ல எப்பவோ நடந்த இடிப்புக்கு இன்னைக்கும் தெருவெல்லாம் பேரணியா போலீசுக்கு டென்சன் கொடுத்துகிட்டு இருக்கற பிரச்சனைய(டிச 6) பத்தி எழுதறதான்ற டைலம்மால கட்டிங் போடலாம்னு கிளம்பிட்டேன். (சரக்கு போட்டாலாவது சரக்கு எதாவது வருதான்னு பார்ப்போம் )
ஓவர்டு, கேட்ட சரக்க என்னைக்குமே தராத அவங்களுக்கு புடிச்ச சரக்க மட்டுமே தர டாஸ்மாக் . (என்னடாது காலேஜ் வாத்தியார் சரக்குலாம் அடிக்கராருன்னு யோசிக்கறீங்களா? இப்பல்லாம் லேடிஸ் காலேஜ் ஹாஸ்டல் போய் பாருங்க குடிச்சு மட்டுமல முடிச்சும் போட்டு வச்சிருக்காங்க )
வழக்கம் போல சூபர்வைசர் அரசாங்க நலத்திட்டங்களுக்காக அனைத்து குடிமகன்களிடமும் எக்ஸ்ட்ராவாக ரெண்டு ரூபாய் கட்டிங் போட்டு கல்லாவை ரொப்பினார். யாரும் பாக்கறதுக்குள்ள வாங்கிட்டு போய்டனும்னு பரபரப்பா நகர்ந்தப்போ டேய் மாப்ளன்னு ஒரு குரல், நம்பள யாரோ அடையாளம் கண்டுட்டாங்களோன்னு குடிக்காமலே வேர்த்து போய் திரும்பினா அட, நம்ப வெங்கி ..!!.
என்ன வெங்கி?என்றேன் .
எங்கே இந்த பக்கம்? ஒன்ண பார்த்து ரொம்ப நாளாவுது கல்யாணம் ஆயிடுச்சா ? என்றான்.
இன்னும் ஒரு தடவ கூட ஆவலே, உன்ன மாதிரி அதிர்ஷ்டம் எனக்கு இல்ல. இப்பவும் மெய்ன்டன் பண்ணிக்கிட்டு இருக்கியா? என்றேன்.
அதெல்லாமில்ல, வீட்ல இல்ல சும்மா ஜாலியா இருக்கலாம்னு வந்தேன் என என்கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தான். டேய் நான் அத கேக்கல ,ஸ்டில் யுஆர் வித் தட் ஆன்டி ஆர் நாட்? நேராக கேட்டேன்.
இந்த முறை மூத்திரம் குடித்த மாடு மாதிரி சிரித்த அவன் " ஆன்ட்டிலாம் ஊரவிட்டு போய் பல வருஷம் ஆச்சு என நமீதா மேல் சத்தியம் செய்தான். இந்தஇடத்தில் ஒன்று சொல்லியே ஆக வேண்டும், நம்ம வெங்கி பிக்-அப் ட்ராப்லகில்லாடி . ஒரு முறை பழசிராஜா படத்துல இப்பவோ அப்பவோ அவுத்துக்கும்போல இருந்த கனிகா கச்சை மாதிரி கைலிய புடிச்சிக்கிட்டு ஓடி வந்தது இன்னும்ஞாபகம் இருக்கு. என்ன விஷயம்னா ஆன்டி வீட்ல இவன் சரசமாடிட்டு இருந்தப்பஆண்டியோட லைசென்ஸ் ஹோல்டர் காலிங்பெல் அமுக்கிட்டாரு. நம்ப வெங்கிஅப்பதான் ஆய கலை
64 புதுசா ஒன்ன சேக்கரதுக்காக எடக்கு மடக்கானபொசிஷன்ல இருந்தான். பதட்டத்துல சுவர் ஏறி வந்ததுல ஆன்டியோட பேண்டிகால் மாறி இவனோட இடுப்புல வந்துடுச்சு.( இன்னைக்குலாம் அத ரெண்டுபக்கமும் தைச்சு யாராவது குடும்ப தலைவர் ரேஷன் கடைக்கு போனா இலவசஅரிசி இருவது கிலோவும் ஈசியா அடங்கிடும் ) அப்பேற்பட்ட அளவெல்லாம்அடக்கியாண்ட கிங்கு நம்பாளு. இதெல்லாம் நெனைச்சி சிரிச்ச நாங்க மெல்லவெளிய வந்தோம். ஆளுக்கு காலும் நாலு ஆப்பாயிலும் உள்ள தள்ளிருந்தோம். நல்லா பேசிகிட்டு வந்த வெங்கி திடீர்னு குட்டி போட போற ஆடு மாதிரிமுழிச்சான் . என்னடா போதை ஏறிபோச்சா என்னன்னு பார்த்தா செல்லுலவீட்டுக்கரம்மாவோட நம்பர்.
எனக்கு புரியாத விஷயம் இதான் கல்யாணத்துக்கு முன்னாடி கட்டுக்கடங்காதகாளையா
இருக்கறவங்கல்லாம் ஏன் இப்படி சீட்லேஸ் டைகரா மாறிபோனாங்க? (இன்னும் சீடோட இருக்கற டைகர் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் ...)
நல்லாருந்துச்சா சார்...!!! (இந்த வரிய கமல் காதலா காதலா படத்துல ஹனிபா-ட்ட ஹேஎன்டிகேப்ட் வேசத்துல கேட்ட மாதிரி படிக்கவும்)
டிஸ்கி : ஒரு சுவராஸ்யத்துகாக டாஸ்மாக் போனேன் நிஜத்துல இல்ல.